டிட்வா புயல் எப்போது வலுவிழக்கும்? கரையை கடக்காதா? வானிலை மையம் முக்கிய அப்டேட்!

cyclone amutha 1

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது..


இது மேலும் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.. இந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகரும் போது, வட தமிழகம் புதுவை கடலோர பகுதிகளில் இன்று நள்ளிரவில் 60 கி.மீ தொலைவிலும், நாளை அதிகாலை 50 கி.மீ தொலைவிலும், மாலை 25 கி.மீ தொலைவிலும் டிட்வா புயலின் மையப்பகுதி நிலவ வாய்ப்புள்ளது..

அதிகனமழை எச்சரிக்கை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காரைக்கால், புதுச்சேரிக்கு தரப்பட்டுள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. நாளை மாலை 5.30 மணிக்கு பின்னர் முதல் புயல் வலுவிழக்கும்.. டிட்வா புயல் கரையை தொடுவதற்கு வாய்ப்பு கிடையாது.. கடலோர பகுதிகளில் புயலின் மையப் பகுதி நிலவுவதற்கு வாய்ப்பு உள்ளது.. நாளை மாலைக்கு பின்னர் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்..” என்று தெரிவித்தார்..

Read More : டிட்வா அலர்ட்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்? எந்த இடங்களில் மிக அதிக கனமழை பெய்யும்? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

RUPA

Next Post

குடிபோதையில் மட்டையான கணவன்..!! பெட்ரூமுக்குள் ஒட்டுத் துணி இல்லாமல் நண்பனுடன் இருந்த மனைவி..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

Sat Nov 29 , 2025
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்ட ஓட்டுநர், அந்த உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பரிமளா தம்பதியினர், சுமார் 10 ஆண்டுகளாக திருமணம் முடிந்து பெருந்துறையில் உள்ள காசிப் பிள்ளை பகுதியில் வசித்து வந்தனர். ஸ்ரீதர், அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வந்த […]
Erode 2025 1

You May Like