பீஹார் சட்டசபைத் தேர்தலில் NDA கூட்டணி அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்பதே இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை முதல்வர் சம்ராட் சௌதரி உள்ளிட்ட BJP தலைவர்கள், நிதிஷ் குமார் தொடர்ந்தும் முதல்வராக இருப்பார் என்று கூறியிருந்தாலும், முதல்வர் வேப்டாளரை முன்கூட்டியே அறிவிக்காததற்காக மகாகத்பந்தன் (MGB) தொடர்ந்து NDA மீது விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
பீஹார் வெற்றிக்குப் பின்னர், JD(U) வெளியிட்டு பின்னர் நீக்கப்பட்ட ஒரு X (ட்விட்டர்) பதிவு இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. “கடந்தகாலமோ, எதிர்காலமோ இல்லை. நிதீஷ் குமார் தான் பீஹாரின் முதல்வராக இருந்தவர், இருக்கிறார், இருப்பார்,” என்று JD(U) வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியது. ஆனால் அந்த பதிவு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே நீக்கப்பட்டதால், புதிய சந்தேகங்கள் மற்றும் ஊகங்கள் எழுந்தன.
இப்போது அனைவரின் கவனமும் நிதிஷ் குமாரை நோக்கி இருக்கிறது. மாநிலத்தின் நீண்டகால முதல்வர்களில் ஒருவராகவும், பீஹார் அரசியலில் முக்கியமான தலைவராகவும் அவர் உள்ளார். கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பாலான காலத்திலும், எந்த கூட்டணி ஆட்சி செய்தாலும், நிர்வாகத்தின் உச்சியில் நிதீஷ் குமார் இடம்பிடித்திருந்தார்.
நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராவாரா?
நிதிஷ் குமாருக்கு ஆதரவாக பட்னாவில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. முதல்வரின் இல்லத்துக்கு வெளியிலும், நிதீஷ் குமார் ஒரு புலியின் அருகில் நிற்கும் பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டது..
நடப்பு தேர்தலில் என்.டி.ஏ. மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து, 200-க்கும் அதிகமான இடங்களைத் தாண்டி உள்ளது. இதில், பாஜக 96 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதுடன், ஜேடியூ 85 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே சமயம், எதிர்க்கட்சியான மஹாகத்பந்தன் வெறும் 27 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது..
என்.டி.ஏ.க்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்திருந்தாலும், நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்பாரா என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது.
என்.டி.ஏ.வுக்கு சாதகமான முன்னிலைத் தகவல்கள் வெளிப்படத் தொடங்கிய உடனே, ஜேடியூ பேச்சாளர் நீரஜ் குமார், நிதிஷ் தலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களுக்கே இந்த ஆரம்ப முன்னிலைகளின் வெற்றி காரணம் எனக் கூறினார். “நிதிஷ் குமார் அவர் விரும்பும் வரையில் முதலமைச்சராகவே இருப்பார். அவரின் விருப்பமும், மக்களின் எதிர்பார்ப்பும், என்.டி.ஏ.வின் நிலைப்பாடும் மூன்றுமே ஒன்றாக இணைந்துள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் பீகார் முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா தேர்தலுக்கு பிறகு முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.. அவர் நேரடியாக நிதிஷ்குமாரை பெயரை குறிப்பிடாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் முதல்வர் தொடர்பான பதிவை ஜேடியு நீக்கியதால் பீகாரில் அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது..
Read More : ரூ.10,000 மட்டுமல்ல.. பீகாரில் கேம் சேஞ்சராக மாறிய பெண்கள்..! NDA வெற்றிக்கு உதவிய 5 முக்கிய காரணங்கள்!



