பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.. இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச குடும்ப பட்டங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.. அவர் வசித்த ராயல் லாட்ஜ் மாளிகையிலிருந்தும் வெளியேற்றியுள்ளார். இதன் மூலம், இனி அவர் “இளவரசர் ஆண்ட்ரூ” அல்லாமல் “ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் விண்ட்சர்” என அறியப்படுவார்.
வசிப்பிடம் மாற்றம்
ஆண்ட்ரூ தற்போது விண்ட்சர் கோட்டைக்குச் சமீபத்தில் உள்ள ராயல் லாட்ஜ் மாளிகையில் தனது முன்னாள் மனைவி சாரா பெர்குசனுடன் வசித்து வந்தார். இப்போது அந்த மாளிகையையும் காலி செய்ய வேண்டியுள்ளது. அவர் விரைவில் நார்ஃக் கவுண்டியில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் எனப்படும் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் சொந்த நிலத்துக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது. அரசர் சார்ல்ஸ் அவருக்கு தனிப்பட்ட நிதி உதவி வழங்குவதாக கூறப்படுகிறது..
இளவரசர் ஆண்ட்ரூ யார்?
மறைந்த மகாராணி எலிசபெத் இரண்டாம் மற்றும் தற்போதைய அரசர் சார்ல்ஸ் மூன்றாம் ஆகியோரின் இரண்டாவது மகனாக, அரச குடும்ப சிறப்பில் பிறந்தவர் தான் ஆண்ட்ரூ . அவர் சாரா பெர்குசனை திருமணம் செய்துகொண்டார்.. அவர் தற்போது “யார்க் டச்சஸ்” என்ற பட்டத்தையும் இழந்துள்ளார், ஏனெனில் ஆண்ட்ரூ தன் “ட்யூக் ஆஃப் யார்க்” பட்டத்தையும் சில வாரங்களுக்கு முன் தானாகவே கைவிட்டிருந்தார். இவர்களுக்கு இளவரசி பியாட்ரிஸ் மற்றும் இளவரசி யூஜினி என இரு மகள்கள் உள்ளனர்.
ஆண்ட்ரூ 22 ஆண்டுகள் ராயல் கடற்படையில் (Royal Navy)யில் பணியாற்றினார்; 1982ஆம் ஆண்டில் நடந்த ஃபாக்லாந்து போரில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். பின்னர் HMS Cottesmore எனும் கப்பலை கட்டுப்படுத்தும் பொறுப்பும் வகித்தார். 2019இல் பொது கடமைகளிலிருந்து விலகியதன் பின்னர் அவரது இராணுவப் பொறுப்புகள் நிறுத்தப்பட்டன.
ஆண்ட்ரூ பட்டத்தை இழந்தது ஏன்?
சமீபகாலமாக, எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) இருந்ததாகக் கூறப்படும் சந்தேகமான தொடர்புகள் குறித்து, இளவரசர் ஆண்ட்ரூ மீது பெரும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
எப்ஸ்டீனின் பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான விர்ஜினியா ராபர்ட்ஸ் ஜியூஃப்ரே, தனது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட நினைவுக் குறிப்பில் (memoir), ஆண்ட்ரூ தனது மீது பாலியல் வன்முறை செய்தார் என மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த புதிய குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகு, பொதுமக்களும் அரச குடும்பத்தினரும், ஆண்ட்ரூ வசிக்கும் “ராயல் லாட்ஜ்” மாளிகையிலிருந்து நீக்க வேண்டும் என அதிக அளவில் கோரிக்கை விடுக்கத் தொடங்கினர்.
ஆண்ட்ரூ எப்ஸ்டீனை முதலில் 1999இல் கிஸ்லேன் மேக்ஸ்வெல் மூலம் சந்தித்ததாக கூறப்படுகிறது.
2008இல், அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்தில் எப்ஸ்டீன் 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இருந்தபோதிலும், 2010இல் நியூயார்க்கில் ஆண்ட்ரூ உடன் சேர்ந்து நடைபயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஆண்ட்ரூ பின்னர், “அது அவர்களின் நட்பின் முடிவு” என்று விளக்கம் அளித்தார்.
ஆனால், 2024ஆம் ஆண்டில் வெளிவந்த நீதிமன்ற ஆவணங்களில், 2011 பிப்ரவரியில் எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட “ஒரு பிரிட்டிஷ் ராயல் குடும்ப உறுப்பினரின் மின்னஞ்சல்” — அதாவது ஆண்ட்ரூவின் மின்னஞ்சல் — கண்டுபிடிக்கப்பட்டது. அதில்: “தொடர்ந்து தொடர்பில் இருங்கள், விரைவில் இன்னும் கொஞ்சம் விளையாடுவோம்!” என்று எழுதப்பட்டிருந்தது.
2021 ஆகஸ்டில், விர்ஜினியா ஜியூஃப்ரே, ஆண்ட்ரூவுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்; தான் 17 வயதிலிருந்தபோது 3 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டினார். இந்த மாதம் வெளியான அவரது “Nobody’s Girl” நினைவுக் குறிப்பில், எப்ஸ்டீன் தன்னை ஆண்ட்ரூ உடன் பாலியல் உறவில் ஈடுபடுத்தினார் என கூறப்பட்டுள்ளது.
2022 பிப்ரவரியில், இரு தரப்பும் வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்தன. ஆண்ட்ரூ எந்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளாதபோதிலும், சுமார் $12 மில்லியன் (பவுண்டு £9 மில்லியன்) இழப்பீடு தொகை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதற்குப் பிறகு, மகாராணி எலிசபெத் இரண்டாம் 2022 ஜனவரியில் ஆண்ட்ரூவின் இராணுவ பட்டங்களையும் அரச ஆதரவுகளையும் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : “அற்புதமான சந்திப்பு..” சீனா மீதான வரியை 10% குறைப்பு.. ஜின்பிங்கை சந்தித்த பின் முடிவை மாற்றிய ட்ரம்ப்!



