“தவெகவில் இணைந்தது ஏன்”..? “எல்லா கட்சிகளையும் பார்த்துட்டோம்”..!! ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் பரபரப்பு பேட்டி..!!

TVK Arun 2025

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டார். சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அருண் ராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இது எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். சிறு வயது முதலே மதச்சார்பற்ற அனைவரையும் உள்ளடக்கிய அரசியலின் மீது விருப்பம் இருந்தது.


தேர்தல் வெற்றியை கடந்து அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் விஜய் எடுத்திருக்கும் இந்த பிரயத்தனத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு எந்தக் கட்சியில் இணைய வேண்டும் என்றே சாய்ஸே இல்லை. ஏனென்றால், அனைத்துக் கட்சிகளையும் பார்த்துவிட்டோம். முதலில் நானும் ஒரு சாமானிய மனிதன் தான்.

சாமானிய மனிதர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்றுதான் சிவில் சர்வீஸூக்கு வந்தேன். நன்றாக பணி செய்த திருப்தி எனக்கு இருக்கிறது. மேலும் எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

ஜனநாயக நாட்டில் மக்களிடம்தான் உண்மையான அதிகாரம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் மட்டும்தான் கொள்கைப்பிடிப்பு இருக்கிறது. வேறு எந்த கட்சிகளிடமும் இல்லை. விஜய் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்த விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.

யார் இந்த அருண்ராஜ்..?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ், மருத்துவம் பயின்றவர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கடந்த 2009ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் பெற்று பெற்று வருமான வரி சேவையில் (IRS) இணைந்தார். அப்போது, இவருக்கு அரசியலுக்கான ஆர்வமும் வந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் விஜய் சில சிக்கல்களை சந்தித்தபோது, அவருக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்டியவர் அருண்ராஜ் தான் என்று கூறப்படுகிறது. மேலும், விஜய் கட்சி தொடங்கிய பிறகு, கொள்கை அமைப்பில் இருந்து மாநாட்டு திட்டங்கள் வரை அருண்ராஜின் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! மாத சம்பளம் எவ்வளவு..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ரோ.. நச்சுன்னு 4 கார்களை களம் இறக்கும் மாருதி சுஸுகி..!! அவை எப்படி இருக்கும்..?

Mon Jun 9 , 2025
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் பல புதிய கார்கள் வெளியிட தயாராக உள்ளது. சிறந்த டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக மைலேஜ் என பல அம்சங்களை உள்ளடக்கிய கார்களை விரைவில் சந்தையில் காணலாம். நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனெனில், இந்த புதிய கார்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் உருவாக்கப்படுகின்றன. தற்போது வரை, சுசுகி நிறுவனம் […]
marutisuzuki2 1731422776

You May Like