“உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும் ஏன் மாரடைப்பு வருகிறது”..? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி காரணங்கள்..!!

Heart 2025

நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆரோக்கியமானது என நினைத்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் கூட திடீர் மாரடைப்பில் இருந்து தப்பிக்க முடியமால் போவதை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாகவே, ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம்முக்கு செல்வோர் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இது ஃபிட்டாக இருபவர்களை கூட தாக்கும் என்ற முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. Indian Heart Association ஆய்வின்படி, இந்தியாவில் நிகழும் மாரடைப்பு மரணங்களில் 50%க்கும் அதிகமானவை 50 வயதுக்கு உட்பட்டவர்களிடையே ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், மூத்த இதயவியல் ஆலோசகரும், பிரபல நிபுணரான டாக்டர் மிதேஷ் குமார் மாரடைப்புக்கான சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

* ஒரு நபர் அதிக கொலஸ்ட்ரால் அல்லது முன்கூட்டிய இதய நோய்க்கான வாய்ப்பை மரபணு வழியே பெற கூடும்.

* கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களும், அதிக சாதனை செய்பவர்களும் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நாள்பட்ட மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். ஆனால், இது ரத்த அழுத்தம் மற்றும் இன்ஃபளமேஷனை அதிகரிக்கும், இதனால் காலப்போக்கில் தமனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* உயர் ரத்த அழுத்தம் “சைலன்ட் கில்லர்” என்று குறிப்பிடப்படுகிறது. இது நன்கு உடல் தகுதியோடு உள்ளவர்களிடமும் கூட இருக்கலாம். இதற்கு சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால், ஒருகட்டத்தில் தமனிகளை விறைப்பாக்கி, இதய தசையை பலவீனப்படுத்தி, மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

* அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது வார்ம்-அப் இல்லாமல் திடீரென கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடக் கூடாது. இது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

* உடலில் குறைவான கொழுப்பு இருப்பது அல்லது சிக்ஸ் பேக் வைப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் இல்லை. சிலர் வெளியே ஆரோக்கியமாக இருந்தாலும், கொலஸ்ட்ரால், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அல்லது தமனிகளில் பிளேக் படிதல் ஆகிய பாதிப்புகளை கொண்டிருக்கலாம்.

* இதய ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, அது நிலையான உள் பராமரிப்பு, மரபணு ஆபத்து, விழிப்புணர்வு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் பற்றியது. இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை போல உணர்ந்தாலும், விழிப்புடன் செயல்படுவது உங்களை பாதுகாக்க கூடும்.

Read More : மீண்டும் மக்கள் தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம்..!! பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

CHELLA

Next Post

வாகன டயர்கள் கருப்பு நிறத்தில் இருக்க இதுதான் காரணம்!. இதுக்கு இவ்வளவு பவர் இருக்கா?.

Sat May 31 , 2025
வாகனம் இல்லாத வீடு இல்லை. டயர் இல்லாத வண்டியில்லை. வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரே பாகம் டயர்கள்தான். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்களை காண்போம். கடந்த 1895ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் டயர் வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிற டயர்கள் நீண்ட […]
vehicle tire black 11zon

You May Like