ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?. காரணம் இதுதான்!

yawn 11zon

பிறர் கொட்டாவி விடுவதைப் பார்த்தும் நமக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நடக்கும். இது குறித்தும் அறிஞர்கள் ஆய்வு நடத்தி ஆச்சரியமான முடிவுகளை பெற்றிருக்கின்றனர். பிறர் கொட்டாவி விடுவதை பார்த்ததும் கொட்டாவி வருவது என்பது குடும்ப உறுப்பினர்களிடையே தான் அதிகமாக இருக்கிறதாம். குடும்ப உறுப்பினர் கொட்டாவி விடுவதை பார்த்தும் கொட்டாவி வரும் எண்ணிக்கை அதிகம் என்றும், அதுவே அந்நியர்கள் என்றால் இந்த எண்ணிக்கை குறைவு தான் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் மூளையில் இருக்கும் கண்ணாடி நியூரான்கள் (Mirror Neurons) என தெரியவந்துள்ளது.


பிறர் கொட்டாவி விடுவதைப் பார்த்தும் நமக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நடக்கும். இது குறித்தும் அறிஞர்கள் ஆய்வு நடத்தி ஆச்சரியமான முடிவுகளை பெற்றிருக்கின்றனர். பிறர் கொட்டாவி விடுவதை பார்த்ததும் கொட்டாவி வருவது என்பது குடும்ப உறுப்பினர்களிடையே தான் அதிகமாக இருக்கிறதாம். குடும்ப உறுப்பினர் கொட்டாவி விடுவதை பார்த்தும் கொட்டாவி வரும் எண்ணிக்கை அதிகம் என்றும், அதுவே அந்நியர்கள் என்றால் இந்த எண்ணிக்கை குறைவு தான் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் மூளையில் இருக்கும் கண்ணாடி நியூரான்கள் (Mirror Neurons) என தெரியவந்துள்ளது.

கொட்டாவி நன்மைகள் என்ன? கொட்டாவி விடுவது பல உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது மூளையின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இரத்தத்திற்கு அதிக ஆக்ஸிஜனைக் கொண்டு வந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் புத்துணர்ச்சியோடு இருப்பதை அதிகரிக்கிறது. கொட்டாவி விடுவதால் இந்த நன்மைகள் கிடைக்கிறதா என்றால், அது பெரும்பாலும் விவாதத்திற்குரிய தலைப்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொட்டாவி குறித்து தொடரும் ஆய்வுகள்: கொட்டாவி மூலம் மூளையின் செயல்பாட்டை அறிந்து கொள்ள மருத்துவ உலகில் இருக்கும் ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மூளை கொட்டாவிக்கு எப்படி ரியாக்ட் செய்கிறது, அதனால் என்னென்ன செல்கள் எல்லாம் தூண்டப்படுகிறது, உடனடியாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன, அதன் நன்மை தீமைகள் மற்றும் அறிகுறிகள் குறித்தும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். கொட்டாவி சோம்பேறி தனத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. தூக்கமின்மை இருந்தாலும் கொட்டாவி வரும். மனச்சோர்வின் அறிகுறியாகவும் கொட்டாவி பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து ஆய்வுகள் இன்னும் தொடருகின்றன.

Readmore: “நான் உனக்கு டேன்ஸ் சொல்லித்தரேன்”..!! சிறுமியை காருக்குள் ஏற்றி மாஸ்டர் செய்த காரியம்..!! கதறி அழுத அதிர்ச்சி சம்பவம்..!!

KOKILA

Next Post

பலூசிஸ்தானில் வன்முறை!. சூரப் நகரை கைப்பற்றிய பலூச் இராணுவம்!. காவல் நிலையத்திற்கு தீ வைத்த கொடூரம்!.

Sat May 31 , 2025
பலூசிஸ்தானின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியதாக பலூச் விடுதலைப் படை கூறியுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுராப் நகரை பலூச் போராளிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சூராப் நகரத்தில் உள்ள காவல் நிலையத்தை சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்து எரித்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு BLA பொறுப்பேற்றுள்ளது இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பலூச் போராளிகள், சூரப் நகரத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் […]
balochistan fire 11zon

You May Like