காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோபமடைந்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம், காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல்காந்தி “ நீங்கள் ஏன் எப்போதும் பாஜக சொல்வதை சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் பாஜக சொல்வதைச் சொல்கிறீர்கள்” என்று கோபமாக பதிலளித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “மிக எளிமையான விஷயம் உள்ளது. அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள ரூ. 20,000 கோடி யாருக்குச் சொந்தமானது? அவர்களின் பினாமிகள் யார்..?” என்று கேள்வி எழுப்பினார்..
பல கட்சித் தலைவர்களுடன் ராகுல்காந்தி நீதிமன்றத்திற்கு சென்றதால், அவர் நீதித்துறைக்கு அழுத்த கொடுப்பதாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், ராகுல்காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்..
முன்னதாக நேற்று ,மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். அவருடன் அவரது சகோதரியும் கட்சித் தலைவருமான பிரியங்கா காந்தியும் சென்றிருந்தார். அவருடன் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர்களும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தனர்…
2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது..
மேலும் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. எனினும் 2 ஆண்டு சிறைத்தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்கு முன் ராகுல் காந்தி இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நேற்று மேல்முறையீடு செய்தார்.. . இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக குஜராத் அரசு, மனுதாரரான பாஜக எம்.எல். புருனேஷ் மோடி ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.. மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்றைய தினம் ராகுல்காந்தி ஆஜராக தேவையில்லை என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..