நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு என்பதற்கு, பெயரை தவிர வேறு ஏதாவது அடையாளம் இருக்கா? தமிழே இல்லை எனில் அது எப்படி தமிழ்நாடாகும்.. எங்கள் முன்னோர்களுக்கு இருக்கும் அடையாளம் எங்க? ஒரு இனம், தனது தாய்மொழியில் இறைவனை வழிபட முடியாத நிலை, தனது தாய்மொழியில் வழக்காட முடியாத நிலையை பெற்றிருந்தால் அது அடிமை இனம் என்று பொருள்.. ஒரு தேசிய இனம் எப்படி சுருங்கியது..
தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லிவிட்டு, தமிழில் வழிபாடு செய்வதில் என்ன பிரச்சனை? தமிழிலும் வழிபாடு செய்யப்படும் என்று போனால் போகிறது என்று ஏன் சொல்கிறீர்கள்.. இது என் இனம், என் மொழியில் இங்கு வழிபட வேண்டும்.. சங்கம் வைத்த தமிழ் வளர்த்த முன்னோர்கள் நாங்கள்.. இன்று சாதிக்கு சங்கம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மானமும், வீரமும், அறமும் உயிரென்று வாழ்ந்த கூட்டம் இன்று, அர்ப்ப ஒரு சீட்டு, 2 சீட்டுக்காக, வாரியப்பதவிக்கு கேவலப்பட்டு நிற்கிறது. தமிழுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை.. உலகின் சிறந்த மொழி என் தமிழ் மொழி மட்டும் தான்.. இயற்கையின் மொழி தமிழ் தான்.. இறைவனால் பேசப்பட்ட மொழி தமிழ் தான். கலைஞர் பிறந்தநாளை ஏன் செம்மொழி நாளாக கொண்டாடுகிறீர்கள்.. மொழிக்காக உயிரைவிட்ட நடராசன் இறந்த நாள் தான் செம்மொழி நாளாக இருக்க வேண்டும்..
ஒரு இனக்கூட்டம் எங்காவது இரண்டு ஏக்கரில் வாழ்ந்திருக்குமா? 500, 1000 ஏக்கரில் பரந்து வாழ்ந்திருக்கும்.. கீழடியில் 2 ஏக்கரில் தோண்டிவிட்டு, ஏன் ஆய்வை தொடரவில்லை. மீதமுள்ள இடங்களை ஆய்வு செய்வதில் உனக்கு என்ன பிரச்சனை.. தமிழனின் தொன்மம், தமிழனின் அடையாளங்கள் உலகத்திற்கு தெரிந்துவிடும்..
இந்திய நாகரிகம், திராவிட நாகரிகம் என்று சொல்கிறீர்கள்.. தமிழன் நாகரிகம் என்று சொல்ல உனக்கு ஏன் வலிக்கிறது? இன்று தான் கீழடி தமிழரின் தாய்மடி என்று தெரிகிறதா? எந்த பெருமையும் தமிழருக்கு வந்துவிடக்கூடாது.. தமிழர்களை பற்றி யாரும் இந்த நாட்டில் பேசமாட்டார்கள்.. எங்கள் அடையாளம் இங்கு என்ன இருக்கிறது? எனக்கு கொலைவெறி வந்துவிடும்..” என்று தெரிவித்தார்..
Read More : செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? எல்லாமே திமுக சதி.. அன்புமணி குற்றச்சாட்டு..