உலகின் காலண்டர் ஏன் டிசம்பர் 31 அன்று முடிகிறது? ஆண்டின் கடைசி நாளுக்குப் பின்னால் உள்ள ஆச்சரியமூட்டும் கதை.!

dec 31

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு கவுண்ட் டவுன், பட்டாசு, கொண்டாட்டம், புதிய தீர்மானங்கள் என்று ஒரே உணர்வில் ஒன்றாகிறது.
ஆனால் ஒரு கேள்வி – ஆண்டு ஏன் இதே நாளில் முடிகிறது? இது விஞ்ஞானத்தால் தீர்மானிக்கப்பட்டதா? இல்லை மனிதர்களின் அரசியல், அதிகாரம், வரலாற்றின் விளைவா? இந்த கேள்விக்கான பதில் – ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து வரும் ஒரு சுவாரஸ்யமான மனிதக் கதை. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..


மார்ச் மாதத்தில் துவங்கிய “குழப்பமான” ரோமானிய ஆண்டு

இன்றைய ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஆரம்ப கால ரோமானிய காலண்டரில் இல்லை.
பண்டைய ரோம் நாட்டில் மார்ச் மாதத்தில் தான் ஆண்டு தொடங்கியது. அவர்களது காலண்டரில் மொத்தம் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. குளிர்காலமான டிசம்பர் – பிப்ரவரி காலம் புறக்கணிக்கப்பட்டது. அதாவது, சில வாரங்களுக்கு காலமே இல்லை என்ற நிலை!

நுமா பொம்பிலியஸ் – ஜனவரி, பிப்ரவரியை கொண்டு வந்த மன்னன்

கிமு 700 காலப்பகுதியில் மன்னர் நுமா பொம்பிலியஸ் ஜனவரி, பிப்ரவரி என்ற இரண்டு மாதங்களை சேர்த்தார். ஆனால் இதுவும் சரியாக செயல்படவில்லை. அந்த காலத்தில் அரசியல்வாதிகள் தங்களுக்கு வசதியானபோது மாதங்களை மாற்றி, காலண்டரையே கலைத்து விட்டார்கள். பண்டிகைகள் தவறான காலத்தில் வந்தன, பருவங்கள் இடம் மாறின.

ஜூலியஸ் சீசர் – காலத்தையே மாற்றிய அதிகாரம்

கிமு 46-ஆம் ஆண்டில் நிலை மோசமாகியது. அப்போது பேரரசர் ஜூலியஸ் சீசர் எகிப்திய வானியலாளர்களின் உதவியுடன் புதிய காலண்டரை உருவாக்கினார். இதுவே ஜூலியன் காலண்டர். ஆண்டுக்கு 365 நாட்கள் இருந்தன.. ஜனவரி 1 – ஆண்டு துவக்கமாக இருந்தது.. இதனால் டிசம்பர் தானாகவே கடைசி மாதமாக மாறியது.
அன்று முதல் டிசம்பர் 31 ஆண்டின் முடிவு என்ற கருத்து நிலை பெற்றது.

போப் கிரிகொரி

ஆனால் ஜூலியன் காலண்டரிலும் சிறிய பிழை இருந்தது. காலப்போக்கில் பருவங்கள் 10 நாட்கள் முன்னேறி விட்டன. அதனால் 1582-ல் போப் கிரிகொரி XIII புதிய கிரிகோரியன் காலண்டரை அறிமுகப்படுத்தினார்.

லீப் இயர் விதிகள் திருத்தம்

பருவ கால இடமாற்றம் சரிசெய்யப்பட்டது.. ஆனால் டிசம்பர் 31 ஆண்டின் கடைசி நாள் என்ற அமைப்பு மாற்றப்படவில்லை. இதுவே இன்றும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காலண்டர்.

உலகம் முழுவதும் ஒரே காலண்டர்

சில நாடுகள் நூற்றாண்டுகளாக இதை ஏற்க மறுத்தன. ஆனால் வாணிபம், மதம், கப்பல் பயணம், சர்வதேச தொடர்புகள் ஆகியவை எல்லோரையும் ஒரே காலவரிசையில் இணைத்தன. 20-ஆம் நூற்றாண்டுக்குள் டிசம்பர் 31 – உலகின் பொது “ரீசெட்” பட்டனாகி விட்டது.

பட்டாசுகளுக்குப் பின்னால் இருக்கும் மனிதக் கதை

இன்றைய கவுண்ட் டவுன், ஷாம்பெயின், முத்தம், தீர்மானங்கள் என இவை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பேரரசர்கள், போப்புகள், அரசியல்வாதிகள் எடுத்த முடிவுகளின் விளைவு. அவர்கள் ஒருநாளும் டிஜிட்டல் கடிகாரம் அல்லது நியூ இயர் பார்ட்டி என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் செய்த மாற்றங்கள் தான் இன்று நம்மை டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு ஒரே நேரத்தில் “ஹேப்பி நியூ இயர்” சொல்ல வைக்கிறது.

Read More : பிறந்தது 2026..! உலகில் முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற தீவு நாடு..! எது தெரியுமா?

RUPA

Next Post

கடந்த வாரத்தில் மட்டும் 708 கிலோ கஞ்சா பறிமுதல்.. எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி..!

Wed Dec 31 , 2025
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன. போதைப் பொருள் புழக்கமும், […]
MK Stalin eps

You May Like