கள்ளக்காதலால் கணவரிடம் சிக்கிக் கொண்ட மனைவி..!! தோட்டத்தில் சடலமாக தொங்கிய ஜோடி..!! தவிக்கும் 3 குழந்தைகள்..!!

தேனி மாவட்டம் அரண்மனைப் புதூர் அருகே அய்யனார்புரம் கிராமத்தில் மகுடேஸ்வரன் (45) என்பவர் வசித்து வந்தார். விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்‌, மகுடேஸ்வரனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனியாக வசித்து தனது 3 பிள்ளைகளையும் மகுடேஸ்வரன் வளர்த்து வந்தார். இந்த நிலையில், மகுடேஸ்வரனுக்கு, ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த அமரஜோதி (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தனியார் ஆலையில் வேலை செய்துவந்த இவர், ஏற்கனவே திருமணமாகி கணவர், 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.


மகுடேஸ்வரன் – அமரஜோதி இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் அமரஜோதி குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அய்யனார்புரம் அருகேயுள்ள பள்ளப்பட்டி சாலையில் தனியார் தோட்டத்தில் மகுடேஸ்வரன் மற்றும் அமரஜோதி இருவரும் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

”உன் பொண்டாட்டி கூட அந்த மாதிரிலாம் பண்ணல அண்ணா”..!! அக்னி பரீட்சை நடத்திய தம்பி..!!

Fri Mar 3 , 2023
தெலங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு நபர், தனது மூத்த சகோதரரின் மனைவியுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க அக்னி பரீட்சை நடத்தியிருக்கிறார். சந்தேகப்பட்ட அண்ணன் தனது தம்பி மீது கிராம பஞ்சாயத்திடம் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது குற்றம் செய்யவில்லை என்றால் அக்னி பரீட்சை செய்து நிரூபிக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறியுள்ளார். அதன்படி, அக்னி பரீட்சைக்காக தீமூட்டி அதில் பெரிய இரும்புக் கம்பி […]
WhatsApp Image 2023 03 03 at 10.02.07 AM

You May Like