வயல்வெளியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..!! கணவனை பார்த்ததும் ஆடையின்றி ஓட்டம்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

Sex 2025 5

தெலங்கானா மாநிலத்தின் கிராமம் ஒன்றில், சாயிலு – வினோதா தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாகவே விரிசல் நிலவி வந்துள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சாயிலு, அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில், இயற்கை உபாதையை காரணம் காட்டி வினோதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சந்தேகம் வலுக்கவே, ஒரு கோடாரியை மறைத்து எடுத்துக்கொண்டு சாயிலு அவரைப் பின்தொடர்ந்துள்ளார். இருள் சூழ்ந்த வயல்வெளிக்கு நடுவே, வினோதா தனது கள்ளக்காதலன் பாலேஷுடன் உல்லாசமாக இருந்ததை சாயிலு நேரில் பார்த்துள்ளார்.


இதனால், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சாயிலு, தான் கொண்டு வந்த கோடாரியால் பாலேஷை தாக்கினார். தலையில் பலமாக விழுந்த வெட்டில், பாலேஷ் அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த வினோதா, ஆடை கூட அணியாமல் அங்கிருந்து இருட்டில் அலறியபடி ஓடி மறைந்துள்ளார். கொலை செய்த வேகத்திலேயே காவல் நிலையத்திற்கு சென்ற சாயிலு, “நான்தான் பாலேஷை கொன்றேன்” என்று கூறி சரணடைந்தது போலீசாரையே திகைக்க வைத்துள்ளது.

தற்போது சாயிலு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாலேஷின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அந்தப் பதற்றமான சூழலில் அங்கிருந்து ஓடிச் சென்ற வினோதா இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார்? உயிருடன் இருக்கிறாரா? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Read More : ஆற்றுப்பகுதியில் ஓரினச்சேர்க்கை..!! திடீரென ஆணுறுப்பை சிதைத்து கொடூர கொலை செய்த நண்பன்..!! திண்டுக்கல்லில் திடுக்கிடும் சம்பவம்..!!

CHELLA

Next Post

2.5 கோடி ஆதார் எண்கள் ரத்து..!! இனி எந்த சலுகைகளும் கிடைக்காது..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

Thu Feb 5 , 2026
உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பான ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, உயிரிழந்த நபர்களின் பெயரில் புழக்கத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ஆதார் எண்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசின் சலுகைகள் தகுதியற்றவர்களுக்கு செல்வதை தடுக்கவும், தரவுத்தளத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 134 கோடிக்கும் […]
Aadhaar 2025

You May Like