கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் தனிப்பட்ட நிர்வாணப் படங்களை வாட்ஸ்அப் டிபி-யில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட கணவன் – மனைவி இருவரும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், கணவர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மனைவியின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்த நிலையில், தனது மனைவி வேறொரு நபருடன் ரகசியமாக நிர்வாணமாக வீடியோ கால் பேசியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த வீடியோ காலின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கண்ட கணவர், தாங்க முடியாத கோபத்தில் அதை உடனடியாக தனது வாட்ஸ்அப் ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளார். தனது நிர்வாணப் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, உடனடியாகச் சம்பந்தப்பட்ட கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், இந்தச் செயலில் ஈடுபட்ட கணவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும், சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



