கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி போட்ட பளே பிளான்..!! காட்டுக்குள் கிடந்த கணவன் சடலம்..!! கடைசியில் வெளிவந்த திடுக்கிடும் சம்பவம்..!!

affair murder 1

மத்தியப்பிரதேச மாநிலம் ததியாவில், 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, சிந்த நதி பாலத்தின் அடியில் உள்ள அடர்ந்த புதர்களுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அந்த சடலத்தை போலீஸார் முறைப்படி நல்லடக்கம் செய்திருந்தனர்.


ஆனால், காணாமல் போன தனது உறவினர் குறித்து ஹன்ஸ்ராஜ் வர்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து, புதைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார் அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டறிந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜின் மனைவி பபிதா வர்மாவுக்கும், அவரது உறவினரான ஹேமந்த் ஆர்யாவுக்கும் இடையே திருமணத்தை தாண்டிய முறையற்ற உறவு இருந்துள்ளது. தனது கணவர் மது அருந்திவிட்டுத் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி வந்த பபிதா, தனது காதலனுடன் இணைந்து கணவனை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இந்தச் சதித் திட்டத்தின்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஹேமந்தும் அவரது நண்பர் அனிலும் சேர்ந்து ஹன்ஸ்ராஜை மது அருந்த வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆளில்லாத பகுதியில் வைத்து, தாங்கள் வைத்திருந்த மஃப்ளரால் ஹன்ஸ்ராஜின் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு, சடலத்தைச் சத்தமில்லாமல் நதிக்கரை புதரில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். இந்த மர்ம கொலையில் துப்பு துலக்கப் போலீஸாருக்குப் பெரிதும் உதவியது செல்போன் அழைப்பு தரவுகள் (CDR) மட்டுமே. பபிதா மற்றும் ஹேமந்த் ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட தொடர் அழைப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்துப் போலீஸார் வலைவீசியபோது, உண்மைகள் ஒவ்வொன்றாக அம்பலமானது.

இறுதியில், திட்டமிட்டு கொலை செய்த மனைவி பபிதா, அவரது காதலன் ஹேமந்த் மற்றும் கொலையில் உடந்தையாக இருந்த அனில் ஆகிய மூவரையும் ததியா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு விக்கெட்..? தவெகவில் இணையும் வெல்லமண்டி நடராஜன்..!! செங்கோட்டையனுடன் ரகசிய டீலிங்..!!

CHELLA

Next Post

இனி பாரபட்சமே பார்க்க மாட்டோம்..!! சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு..!! ரூ.25,000 ஸ்பாட் ஃபைன்..!!

Thu Feb 19 , 2026
சென்னை மாநகரில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக “தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025” என்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் இனி மிகக்கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. சாலைகளில் தூசிகளையும் மணலையும் சிதறவிட்டபடி செல்லும் வாகனங்களால் ஏற்படும் […]
Chennai Corporation 2025

You May Like