ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ராமதாஸின் கொள்கையை கையில் எடுத்து பாமகவை வழிநடத்த இருப்பதாக அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக அறிவித்தார். இதற்கிடையே, பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் இருவருக்கும் சமாதான பேச்சுவார்த்தையை நடத்தி வந்தனர். இந்த சூழலில் தான், இன்று ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசியுள்ளார். பாமக மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸை சந்தித்து அன்புமணி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்ததும் அங்கிருந்து அன்புமணி புறப்பட்டுச் சென்றார். தந்தை – மகன் இடையே சமாதான பேச்சுவார்த்தையை ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவில் நிலவும் விரிசலால் பாஜக அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக உடனான கூட்டணியை ராமதாஸ் விரும்பாத நிலையில், அவரை பாஜக பக்கம் இழுக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்க பாமகவை சமாதானப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : மாணவர்களே..!! ஜூன் 15ஆம் தேதி தேர்வு நடக்காது..!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!