மீண்டும் பணிநீக்கமா..? சைலண்டா காய் நகர்த்தும் மைக்ரோசாப்ட்.. கதறும் ஊழியர்கள்..!!

Microsoft

உலக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாப்ட், தற்போது மீண்டும் பெரும் அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள தகவல் ஊழியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட்டில் வேலை என்பது பலருக்கும் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நிறுவனத்தில் நடைபெறும் பணிநீக்கங்கள் ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.


இது கடந்த 18 மாதங்களில் மைக்ரோசாப்ட் மேற்கொள்கின்ற நான்காவது பெரிய பணிநீக்கம் என்பது கவலையளிக்கும் உண்மை. ஜனவரி 2024ல் கேமிங் பிரிவில் 1,900 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். செப்டம்பர் 2024ல் மேலும் 650 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மே 2025ல் ஒரேநாளில் 6,000 ஊழியர்கள் பணி இழந்தனர்.

தற்போது மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் மற்றும் தி வெர்ஜ் அறிக்கைகளின்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேலாளர்கள் கணிசமான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர். டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பாக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும். இந்த மாற்றங்கள் அனைத்தும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப துறையில் இருக்கும் புதிய நிதிச்சுமைகள், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட தடை, ஆகியவை இத்தகைய பணிநீக்க முடிவுகளுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.

Read more: படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம்..!! – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Next Post

அதிமுக உட்கட்சி விவகாரம்.. எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

Fri Jun 27 , 2025
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் கட்சிக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்ககூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டது.. இந்த […]
High court ADMK office 16570775763x2 1

You May Like