உலக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாப்ட், தற்போது மீண்டும் பெரும் அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள தகவல் ஊழியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட்டில் வேலை என்பது பலருக்கும் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நிறுவனத்தில் நடைபெறும் பணிநீக்கங்கள் ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
இது கடந்த 18 மாதங்களில் மைக்ரோசாப்ட் மேற்கொள்கின்ற நான்காவது பெரிய பணிநீக்கம் என்பது கவலையளிக்கும் உண்மை. ஜனவரி 2024ல் கேமிங் பிரிவில் 1,900 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். செப்டம்பர் 2024ல் மேலும் 650 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மே 2025ல் ஒரேநாளில் 6,000 ஊழியர்கள் பணி இழந்தனர்.
தற்போது மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் மற்றும் தி வெர்ஜ் அறிக்கைகளின்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேலாளர்கள் கணிசமான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர். டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பாக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும். இந்த மாற்றங்கள் அனைத்தும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப துறையில் இருக்கும் புதிய நிதிச்சுமைகள், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட தடை, ஆகியவை இத்தகைய பணிநீக்க முடிவுகளுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.