பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலுமே அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழகுவார்கள். அந்த வகையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கபட்டது. ஆனால், அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால், இந்த முறை ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், அவணியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கு தகுதி சான்றிதழை அரசு கால்நடை மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கு பெறும் மாடுகள் நாட்டு இன காளையாக இருக்க வேண்டும். காளைக்கு மூன்று வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.