நாகை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக சிறுபான்மையினரின் குரலாக ஒலித்து வந்த முக்கியத் தலைவர் ஜி.எஸ்.பி. அலிசாஹிப், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது.
மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அலிசாஹிப், நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாகூர் ஹனிபாவுடன் சிறை சென்றுள்ளார். டெல்டா மாவட்டங்களில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியில் முக்கியப் பங்கு வகிக்கும் அலிசாஹிப்பின் இந்த முடிவு, திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்திருப்பது டெல்டா மாவட்ட அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.



