மிகவும் வலிமிக்க, உயிருக்கு ஆபத்தான தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்..! முகப்பருவை அழுத்தியதால் நேர்ந்த விபரீதம்..!

woman pimple

முகத்தில் பருக்கள் தோன்றும் அதை கிள்ளுவது அல்லது அழுத்துவது என்பது பெரும்பாலான மக்களின் பொதுவான பழக்கமாக உள்ளது.. ஆனால் பருவை அழுத்தியதால், பெண் ஒருவர் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், முகத்தின் அதிக ஆபத்துள்ள பகுதியில் மூக்கின் கீழ் ஒரு பரு தோன்றியதை அடுத்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்..


லிஷ் மேரி என்ற பெண் தனது மூக்கிற்கு கீழே இருந்த ஒரு பருவை அழுத்த முயன்றுள்ளார்..இது முகப்பருக்கான பொதுவான இடமாகும். சில மணி நேரங்களுக்குள், அவரது முகத்தின் இடது பக்கம் திடீரென வீங்கியது.. இதனால், சிரிக்க முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார்..

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர்கள் அவளுக்கு கடுமையான முக தொற்று இருப்பதைக் கண்டறிந்து, ஆண்டி பயாடிக் மற்றும் ஸ்டீராய்டுகளின் கலவையை பரிந்துரைத்தனர். முகப்பரு முகத்தின் மரண முக்கோணம் என்று அழைக்கப்படும் ஆபத்தான இடத்தில் அமைந்திருந்தது..

இந்தப் பகுதியில் கேவர்னஸ் சைனஸ் வழியாக மூளையுடன் நேரடியாக இணைக்கும் நரம்புகள் உள்ளன, இதனால் உடனடியாக தொற்றுக்கள் பரவும் என்று தோல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

நியூயார்க்கைச் சேர்ந்த தோல் மருத்துவர் டாக்டர் மார்க் ஸ்ட்ரோம் இதுகுறித்து பேசிய போது “இந்த இடத்தில் பருக்கள் தோன்றினால், அதனை எதுவும் செய்யக் கூடாது.. நீங்கள் முகப்பருவை அழுத்தினாலோ அல்லது கிள்ளினாலோ பாக்டீரியா ரத்த ஓட்டத்தில் நுழைந்து மூளைக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு திறந்த காயத்தை உருவாக்கலாம்..” என்று தெரிவித்தார்.. இதனால் குருட்டுத்தன்மை, பக்கவாதம், பக்கவாதம் ஏற்படலாம்.. அரிதான சந்தர்ப்பங்களில், மரணம் கூட ஏற்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்..

ஆபத்துகள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், சில மணி நேரங்களுக்குள் மருத்துவ உதவியை நாடினேன் என்றும் மேரி கூறினார். மேலும் “எனக்கு மிக விரைவாக வலி ஏற்பட்டது என்று நினைக்கிறேன்.. வலி மிகவும் தீவிரமாக இருந்தது என்றும் கூறினார். அடுத்த நாள், அவரது நிலை மேம்பட்டது, இருப்பினும் அவரது புன்னகை சீரற்றதாகவே இருந்தது. 3 நாட்களுக்குப் பிறகு, 100 சதவீதம் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, முகத்தின் மையப் பகுதியில் பருக்களை அழுத்துவது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. தொடர்ச்சியான அல்லது வலிமிகுந்த பருக்கள் இருந்தால் நிபுணர்களை அணுகவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

Read More : தலைவலி, மூட்டு வலிக்கு வலி நிவாரணி போடுறீங்களா? சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

RUPA

Next Post

காதலனை பார்க்க கடல் கடந்து வந்த காதலி.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்.. அடுத்து நடந்தது என்ன..?

Thu Aug 14 , 2025
Girlfriend who came to Sri Lanka by boat to see her boyfriend
kadhallove 1755080626 1

You May Like