”அனைத்துப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும்”..!! பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பயணித்த கனிமொழி எம்பி..!!

டாக்டர், என்ஜினியர்கள் மட்டுமல்ல அனைத்துப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டிப் பேசியுள்ளார் திமுக எம்பி கனிமொழி.


கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா, பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரை பற்றியச் செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநராக ஷர்மிளா பணியமர்த்தப்பட்டவுடன் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி பேசினார். இந்நிலையில் கோவை சென்ற அவர் ஓட்டுநரின் அழைப்பை ஏற்று அவருடன் பேருந்தில் பயணம் செய்தார். பெண்களால் லாரி ஓட்ட முடியுமா பேருந்து ஓட்ட முடியுமா என்று சிலர் அர்த்தமற்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில், ஷர்மிளா பேருந்து ஓட்டுனராக சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவருக்கு எனது பாராட்டுகளும் நன்றியும். பெண்களால் டாக்டர், என்ஜினியர்கள் மட்டுமல்ல அனைத்து பணிகளையும் செய்ய முடியும்‌ என்று கனிமொழி தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்தக் கேள்விக்கு ஒரு தளத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இது நிச்சியம் வெற்றி பெறும் என்று நாடு காத்திருக்கிறது. தந்தை ஓட்டுனராக இருந்து வரும் நிலையில் ஷர்மிளாவிற்கு வாகனம் ஓட்டுவது என்பது அலாதி பிரியமாக இருந்தது. இதனையடுத்து, அவரது தந்தை அவருக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்த நிலையில், ஆட்டோ, மினி சரக்கு வாகனம், பேருந்து என அடுத்தடுத்து வாகனங்களை இயக்கி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஷர்மிளா பெற்றுள்ளார்.

தற்போது அவர் காந்திபுரத்தில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் தனியார் நகர பேருந்தை ஓட்டி வருகிறார். ஏராளமானோர் அவருக்கு நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷர்மிளா இயக்கும் தனியார் நகர பேருந்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த கனிமொழி எம்.பி ஷர்மிளாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

CHELLA

Next Post

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை…..! காரணம் இதுதான்…..!

Fri Jun 23 , 2023
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தமிழக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி உட்பட முன்னாள் அதிகாரிகள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ உள்ளிட்டவைகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால் தமிழகம் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் மறுபடியும் லஞ்ச ஒழிப்புத்துறை […]

You May Like