தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து..!! மாறி மாறி தாக்கிக் கொண்ட பெண்கள்..!! குமாரபாளையத்தில் குடுமிப்பிடி சண்டை..!!

Namakkal 2025

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த குமாரபாளையம் பகுதியில் சொத்து தகராறில் பெண்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனியப்பன் என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்கா கந்தாயி என்பவருக்கு பத்திரம் மூலம் எதுவும் எழுதித் தரமால், வாய்மொழி உறுதியாக வீட்டின் இடத்தை கொடுத்துள்ளார்.


இதற்கிடையே, கந்தாயி இறந்த நிலையில், அவரது மகள் ராணி தங்களுக்கான சொத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். மேலும், ராணி தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டின் மேற்கூரையை பராமரிப்பதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ராணியின் ஆதரவாளர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இது கைகலப்பாகவும் மாறியது.

தொடர்ந்து, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும், இரு பெண்கள் மாறி மாறி தலைமுடியை பிடித்துக் கொண்டு, தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கிக் கொண்டனர். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More :மாணவர்களே..!! காலாண்டு தேர்வு தேதி வந்தாச்சு..!! இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

CHELLA

Next Post

இந்தியாவில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்!. எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!

Wed Sep 3 , 2025
இந்தியா முழுவதும் மிகவும் பொதுவான கல்லீரல் நிலைகளில் ஒன்றாக கொழுப்பு கல்லீரல் நோய் வேகமாக பரவி வருவதால், ஜலந்தரில் உள்ள பிரீமியர் காஸ்ட்ரோஎன்டாலஜி இன்ஸ்டிடியூட்டின் (பிஜிஐ) இயக்குநர் மற்றும் தலைமை ஆலோசகர் டாக்டர் அமித் சிங்கால், அதன் காரணங்கள், அறிகுறிகள், நோயறிதல் மற்றும் தடுப்பு பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். டாக்டர் சிங்கால் கூற்றுப்படி, இந்த நோய் மது அருந்துபவர்களுக்கு மட்டும் அல்ல என்றும், குழந்தைகளுக்கும் கூட கொழுப்பு கல்லீரல் […]
Fatty liver disease children 11zon

You May Like