fbpx

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக முன்கூட்டியே கொரோனாவை வரவழைத்துக் கொண்ட பிரபல பாடகி..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டால், எங்கே நியூ இயர் பார்ட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்கிற கவலையில், புத்தாண்டு, கிறிஸ்துமஸுக்கு எல்லாம் முன்னதாகவே வலிய சென்று கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார் சீனாவின் பிரபல பாடகி ஜேன் ஜாங்.

சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் லியாங்யின் (38) பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவுக்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஜாங் தனது புத்தாண்டு நிகழ்ச்சியின் போது நோய்த்தொற்றின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக முன்னதாகவே கொரோனா பாதிப்பை வேண்டுமென்றே வரவழைக்க விரும்புவதாக கூறினார். “புத்தாண்டு நிகழ்ச்சியின் போது எனது உடல்நிலை பாதிக்கப்படும் என்று நான் கவலைப்பட்டேன். எனவே, வைரஸில் இருந்து மீள எனக்கு தற்போது நேரம் இருப்பதால் நேர்மறை சோதனை செய்த கொரோனா பாதிப்பு குழுவை நான் சந்தித்தேன்” என்று அவர் ஒப்புக்கொண்டார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக முன்கூட்டியே கொரோனாவை வரவழைத்துக் கொண்ட பிரபல பாடகி..!!

அதன்பின் மறுநாள் தனக்கு காய்ச்சல், தொண்டை புண் மற்றும் உடல் வலி ஆகியவை கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை என்று கூறினார். தனது அறிகுறிகள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருந்தாலும், அவை ஒரு நாள் மட்டுமே நீடித்ததாக அவர் கூறியுள்ளார். “ஒரு இரவும் பகலும் தூங்கிய பிறகு, எனது அறிகுறிகள் அனைத்தும் மறைந்துவிட்டன… நான் குணமடைவதற்கு முன்பு எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நிறைய தண்ணீர் குடித்தேன் மற்றும் வைட்டமின் சி எடுத்துக் கொண்டேன்” என்று ஜாங் கூறினார். இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்தன. விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, ஜாங் முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

காணாமல் போன 5 வயது சிறுவன்.. பிணமாக கண்டெடுத்த சோக சம்பவம்..!

Tue Jan 3 , 2023
அமெரிக்காவில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் நான்கு மாதங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். ஜுவானோ முங்குயா கடந்த செப்டம்பரில் தனது குடும்பத்துடன் சர்க் ஹப்பார்ட் பூங்காவிற்குச் சென்றார். அங்கு தனது 5 வயது மகன் லூசியனை தனது சகோதரனுடன் விளையாட விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஜுவானோ வந்தபோது, ​​அவரது மகன் லூசியனை காணவில்லை. இதையறிந்த ஜுவானோவின் குடும்பத்தினர் சில நாட்களாக அப்பகுதியில் தீவிரமாக தேடினர். ட்ரைவ் […]

You May Like