fbpx

’அவரு போடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்’..!! ’நீங்க நினைக்குற மாதிரி இல்ல’..!! ’மேட்டரே வேற’..!!

ஒருவர் காதலில் விழுவதற்கு பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் இருக்கும். அப்படி அவர்கள் காதலில் விழுந்தபிறகு, தங்கள் இணையரை எப்பெடியெல்லாம் வர்ணித்து தங்களது காதலை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்பது, காதலில் விழுவதை விடவும் சுவாரஸ்யமான விஷயமாக மாறிவிடுகிறது. திரைப்படங்களும் கூட காதல் காட்சிகள் மூலம் எக்கச்சக்கமான வர்ணிப்புகளை நமக்கு காணக் கொடுத்துள்ளது. ஆனால், சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு பாகிஸ்தானில் காதலொன்று மலர்ந்துள்ளது.

’அவரு போடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்’..!! ’நீங்க நினைக்குற மாதிரி இல்ல’..!! ’மேட்டரே வேற’..!!

பாகிஸ்தானிய பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து கரம் பிடித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! ஆம்… இப்படியான சம்பவமொன்று பாகிஸ்தானில் நடந்துள்ளது. பணக்கார வீட்டு பெண்ணான அவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லியாக இருந்திருக்கிறார் போல. பயிற்சி கொடுத்தபோது அவரது கியர் மாற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண், அவர் மீது காதல் வயப்பட்டிருக்கிறார்.

’அவரு போடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்’..!! ’நீங்க நினைக்குற மாதிரி இல்ல’..!! ’மேட்டரே வேற’..!!

அடுத்த வேலையாக அவர் தன்னுடைய வீட்டில் காதலை பற்றி கூறி, அந்த கார் டிரைவரையே மணமுடித்திருக்கிறார். இது தொடர்பாக `டெய்லி பாகிஸ்தான்’ என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்கள். அப்போது, “அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அந்த சமயத்திலெல்லாம் அவரை கையை பிடித்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றும்” என அப்பெண் காதல் பொங்க பேசியிருக்கிறார். இந்த காதல் தம்பதியின் பேட்டி தற்போது பாகிஸ்தானில் படு வைரலாகி வருகிறது. 

Chella

Next Post

சிறுவன் அழுததால் பின்வாங்கிய குடும்பம்… பாலம் விபத்தில் சிக்காமல் தப்பித்தனர்…!!

Thu Nov 3 , 2022
குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டபோது சிறுவன் அழுத காரணத்தில் ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் பின்வாங்கியதால் மொத்த குடும்பமும் உயிர் தப்பியுளள்ளது. குஜராத் மோர்பி பகுதியை சேர்ந்தவர் மேத்தா, சாகர்பாய் இவர்கள் தனது குடும்பத்தினரான பானுபாய், கோமல், கெவ்னா ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோர்பி பாலத்திற்கு சுற்றிப் பார்க்க செல்ல முடிவெடுத்தனர். அப்போது அவர்களுடன் நேத்ரா என்ற 9 வயது சிறுவன் மற்றும் 5 […]
அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்கிய தொங்கு பாலம்..? பதைபதைக்கும் வீடியோ

You May Like