பச்சிளங்குழந்தைக்கு கொடுக்கப்பட்ட தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இத்தாலியில் அறிவியல் அறிஞர்கள் ஆராச்சியில் ஈடுபட்டபோது மனித தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அறிவியல் விஞ்ஞானிகள் உள்ளனர்.
சமீபத்தில் இத்தாலி நாட்டின் அறிவியல் விஞ்ஞானிகள் ஆரோக்கியமான தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் எடுக்கப்பட்டு அதை சோதனைக்குட்படுத்தி மாதிரிகளை பரிசோதித்தனர். மொத்த மாதிரிகளில் முக்காவாசி பாலில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு கவலைகொள்ளச் செய்வதாககூறிய நிலையில் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் 5 மி.மீ. அளவில் உள்ள இந்த பிளாஸ்டிக் மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆய்வுகளில் மனி த உயிரணுக்கள் விலங்குகள், வன விலங்குகள் செல்களில் நச்சு விளைவை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய ஆய்வு தொடர்ந்து நடந்து வருகின்றது. சில குறிப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் தாக்கம் வாழும் மனிதர்களில் கண்டுபிடிகக்ப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.