உலக மக்கள் தொகை வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் 800 கோடியை தொடும் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தன்று ஐ.நா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது.
தற்போது நெருங்கி வரும் நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் பற்றி பேசப்பட்டு வருகின்றது. உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிகக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகை சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கின்றது. ஐநா கணிப்பு படி அடுத்த ஆண்டு, அதாவது இன்னும் ஒன்றரை மாதத்தில் அதிக மக்கள் தொகை நாடு என்ற சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், 2030ல் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050ல் 970 கோடியாகவும், 2080ல் 1040 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050ல் அதிகரிக்கும் மக்கள் தொகையில் 50 சதவீதத்தை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளே கொண்டிருக்கும் எனவும் ஐநா கூறி உள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் அதுவும் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய 8 நாடுகளில் மட்டும் 2050ல் அதிகரிக்கும் மக்கள் தொகையில் பாதி அளவு பங்களிப்பு இருக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது. ஐநா அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டிற்குள் 850 கோடியை தாண்டும். 2050 ஆம் ஆண்டிற்குள் 970 கோடியை தாண்டும்.