இன்சூரன்ஸ் பணத்துக்காக இப்படி கூடவா செய்வாங்க..? திருமணம் ஆன 4 மாதத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

insurance

4 மாதம் முன் திருமணம் ஆன மனைவியை, இன்சூரன்ஸ் பணம் 30 லட்சம் பெறுவதற்காக கொலை செய்து, அதை சாலை விபத்தாக காட்டிய கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் மாவட்டம், பதாமா அருகே வசித்து வந்தவர் முகேஷ்குமார் மேத்தா (30). அவருடைய மனைவி செவந்தி குமாரி (23). நான்கு மாதங்களுக்கு முன்தான் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் செவந்திகுமாரிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால், கணவர் முகேஷ்குமார் அவரை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

செவந்திகுமாரி சாலை விபத்தில் இறந்துவிட்டால் 30 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு கிடைக்கும் என்பதற்காக முகேஷ், மனைவியை ஹெல்மெட்டால் தலையில் அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் சாலை விபத்து போல நாடகம் போட்டார். தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, தனக்குத்தானே சிறு காயங்களை ஏற்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சாலை விபத்தில் கணவன்–மனைவி இருவரும் காயமடைந்ததாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு, செவந்திகுமாரி உயிரிழந்திருந்தார். முகேஷ்குமார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

தீவிர விசாரணையில், மனைவியை கொன்று இன்சூரன்ஸ் தொகை பெற முயன்றது என முகேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் ஆன நான்கு மாதங்களிலேயே, பணத்துக்காக மனைவியை கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more: Breaking : இவர்களுக்கும் 20% தீபாவளி போனஸ்.. குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..

English Summary

Would they do this for insurance money? The horror that befell a newlywed just 4 months after her wedding!

Next Post

புது குண்டை தூக்கிப் போட்ட தவெக முக்கியப் புள்ளி.. கரூர் பயணத்தை ரத்து செய்த விஜய்? அப்ப அந்த ரூ.20 லட்சமும் ஸ்வாஹாவா?

Thu Oct 16 , 2025
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் […]
vijay karur tvk

You May Like