சென்னையில் இன்றைய (மே 31, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை.
சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலை உயர காரணம். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது.
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் மே 31 ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.8,920க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கும் விற்பனை செய்யபடுகிறது. வெள்ளி விலை ரூ.1000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-05-2025 – ஒரு பவுன் (22 காரட்) ரூ. 71,360
29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920