Gold Rate| இன்றும் தங்கம் விலை குறைவு.. நகை வாங்க இது நல்ல நேரம்..!! – இன்றைய நிலவரம் இதோ

gold 2 1

சென்னையில் இன்றைய (ஜூன் 9, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.


தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை.

சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலை உயர காரணம். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் முந்தைய நாளின் விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, நேற்று (ஜூன் 9) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8980க்கும், ஒரு சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7385க்கும், ஒரு சவரன் ரூ.59,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 117க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,17,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், திங்கட்கிழமையான இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.71,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூபாய் 25 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.8,955க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: 21 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு…!

Next Post

மீண்டும் அச்சுறுத்தும் கோவிட் : குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பெற்றோர்களே இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..

Mon Jun 9 , 2025
கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் குஷால் அகர்வால் கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]
8735cb82 77c3 43f4 b757 d3717bec27c1 800 534

You May Like