“நேபாளத்தில் என்ன நடந்தது என பார்த்தீர்கள் தானே..” சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்..!

supreme court 1

சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை ஏற்க உச்ச் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..


இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.. இருப்பினும் குழந்தைகள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடும் போது,  அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பலர் சமூக வலைதளங்களில் இருந்து விலக முடியாமல் அடிமையாகி விடுகிறார்கள்.. குறிப்பாக குழந்தைகள் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது பல எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. 

இந்த நிலையில் 14 முதல் 18 வரையிலான சிறுவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் இந்த மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.. இந்த மனு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி “ நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முயற்சி செய்யப்பட்டது.. ஆனால் அதற்கு பின் நேபாளத்தில் என்ன நடந்தது என பார்த்தீர்கள் தானே..” என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் நேபாளத்தில் எழுந்த எதிர்ப்பு சுட்டிக் காட்டிய தலைமை நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

RUPA

Next Post

“திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்.. முதல்வர் கம்பு சுற்றுகிறார்..” நயினார் விளாசல்..!

Mon Nov 3 , 2025
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]
nainar nagendran mk Stalin 2025

You May Like