’இந்த தவறை செய்தால் ஓய்வூதியம் கிடைக்காது’..!! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை வழங்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றியிருக்கிறது.


அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியானது வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புது விதிகளின் அடிப்படையில், பணியில் கவனக்குறைவாகவும், அலட்சியம் ஆகவும் செயல்படக்கூடிய ஊழியர்கள் பணியில் இருந்து பணி ஓய்வுப் பெற்ற பிறகு அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளது.

’இந்த தவறை செய்தால் ஓய்வூதியம் கிடைக்காது’..!! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

ஆகவே, மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் பணியின்போது எதாவது கடும் குற்றம் அல்லது அலட்சியப்போக்கில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களது பணி ஓய்வுக்கு பிறகு கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு விதியை மாற்றியமைத்திருப்பது பற்றி சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

CHELLA

Next Post

சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென்று நடந்த துப்பாக்கிச் சூடு….! 5 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி….!

Mon Jan 23 , 2023
ஆசியாவின் வல்லரசு நாடாக திகழ்ந்து வருவது சீனா என்னதான் ஆசியாவின் வல்லரசு நாடாக இருந்தாலும் கூட அந்த நாடு இந்தியாவிடம் எப்போதும் நட்பு பாராட்டியது இல்லை. ஏனென்றால், ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் நாடுதான் இந்தியா. ஆனால் சீனாவுக்கும் உலக அரங்கில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு தற்போது அமெரிக்கா இருக்கும் இடத்திற்கு தான் சென்று விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் […]
china possui maior economia mundo aponta fmi

You May Like