திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வசித்து வந்த தம்பதி தெய்வசிகாமணி, யசோதா. இந்த தம்பதிகளுக்கு சுரேஷ் (25) தினேஷ்குமார் (20) என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 6️
வருடங்களுக்கு முன்னர் தெய்வசிகாமணியும், 2 வருடங்களுக்கு முன்னர் யசோதாவும் மரணம் அடைந்துவிட்டனர்.
ஆகவே குமார் நகர் மிலிட்டரி காலனியில் உள்ள பாட்டி வள்ளியம்மாளுடன் சுரேஷ் மற்றும் தினேஷ்குமார் உள்ளிட்ட இருவரும் வசித்து வந்தனர். அதோடு அந்த பகுதியில் இருக்கின்ற பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. போதைக்கு அடிமையானதால் தினேஷ்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் நேற்று மதியம் தினேஷ்குமார் மது அருந்துவதற்காக வள்ளியம்மாளிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் மன உளைச்சல் மற்றும் கோபத்திற்கு ஆளான அவர், வீட்டை தீவைத்து கொளுத்தி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக எரிந்து கொண்டிருந்த வீட்டின் அறைக்கு சென்று உட்புறமாக தாழிட்டுக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மாள் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் வழங்கினார். அவர்கள் சென்று தீயை அணைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த தினேஷ்குமாரை மீட்டனர் இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், போதை பாசத்திற்கு அடிமையான பேரன் தினேஷ்குமாருக்கு மது அருந்துவதற்கு பணம் கொடுக்க பாட்டி மறுத்ததின் காரணமாக, வீட்டுக்கு தீ வைத்து, தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்பது தெரிய வந்துள்ளது