பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை கடலோர மீனவ கிராமங்களான பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம், ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம் ஆகிய இந்த 5 கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்போர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேற்படி, மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும். 01.07.2022 அன்றைய தேதிப்படி வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology), ஆகிய பிரிவுகளில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.