“பணம் தான் வெச்சிருக்கியே.. கூப்டா வர மாட்டியா”..? உடலுறவுக்கு மறுத்த இளைஞர்..!! ஓங்கி பளார்விட்ட திருநங்கை..!! சுருண்டு விழுந்து பலி..!!

Chennai 2025 1

பாலியல் உறவுக்கு அழைத்தபோது வர மறுத்ததால், இளைஞரை திருநங்கை ஒருவர் அடித்தே கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 45). இவர், வீட்டை விட்டு வெளியேறி, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர், அப்பகுதியில் சடலமாக இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார், ஜான் பாஷாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அப்போது அங்கு திருநங்கை ஒருவர் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து, திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போலீசார், குகன் என்ற திருநங்கையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

சம்பவத்தன்று, ஜான் பாஷா குடிபோதையில் இருந்துள்ளார். மேலும், அவரது சட்டையில் பணம் அதிகம் வைத்திருந்துள்ளார். இதை கவனித்த திருநங்கை, ஜான் பாஷாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், ஜான் பாஷா மறுத்துள்ளார். மேலும், திருநங்கையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த திருநங்கை, ஜான் பாஷாவை கடுமையாக தாக்கியுள்ளார். கழுத்து பகுதியில் தாக்கியதால் ஜான் பாஷா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, திருநங்கை குகன் என்கிற மலைக்காவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : லாபத்தை அள்ளிக் கொடுக்கும் முருங்கை சாகுபடி..!! லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கும் பெண்..!! சாதித்தது எப்படி..?

CHELLA

Next Post

5 வயது சிறுமியை கோயிலுக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம்..!! குற்றவாளியை விடுதலை செய்ததால் அதிர்ச்சி..!! வெளியான பகீர் வீடியோ..!!

Wed May 28 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் மே 18ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. 5 வயது சிறுமி கோவிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரை, பக்கத்து வீட்டுக்காரரான பவித்ரா என்பவர் கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பத்தின் வீடியோ சமூக […]
Rape 2025 3

You May Like