MI கேப்டனாக 10 ஆண்டுகள் நிறைவு!… தான் பெற்ற கோப்பைகளுடன் ஜொலிக்கும் HIT MAN!

கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தான் பெற்றுக்கொடுத்த கோப்பைகளுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் முதல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணி இடம் பெற்று விளையாடி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் ஷான் பொல்லாக், ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிஜே பிராவோ, கெரான் போலார்டு ஆகியோர் கேப்டன்களாக இருந்துள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து ரோகித் சர்மாவிற்கு இன்றைய நாளில் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கேப்டனாக தான் பதவி வகித்த முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துவருகிறார்.

இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் மும்பையில் ரோகித் சர்மா தான் பெற்றுக் கொடுத்த 5 டிராபியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2023 இல் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 7 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். மோசமான ஆட்டத்தால் மும்பை அணியால் கடந்த சீசனில் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அது மட்டுமின்றி ரோகித் சர்மா ஏப்ரல் 30ல் தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரையில் 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6060 ரன்கள் எடுத்டுள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

இராணிப்பேட்டை இளைஞர்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!... 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!...அரசு துறையில் வேலை!

Sun Apr 30 , 2023
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் -80, பருவகால காவலர்-80 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் பணிக்காக இன சுழற்சி அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவகால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் […]
7 million jobs can disappear by 2050 study 1579691557

You May Like