கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தான் பெற்றுக்கொடுத்த கோப்பைகளுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் முதல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணி இடம் பெற்று விளையாடி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் ஷான் பொல்லாக், ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிஜே பிராவோ, கெரான் போலார்டு ஆகியோர் கேப்டன்களாக இருந்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து ரோகித் சர்மாவிற்கு இன்றைய நாளில் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கேப்டனாக தான் பதவி வகித்த முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துவருகிறார்.
இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் மும்பையில் ரோகித் சர்மா தான் பெற்றுக் கொடுத்த 5 டிராபியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2023 இல் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 7 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். மோசமான ஆட்டத்தால் மும்பை அணியால் கடந்த சீசனில் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அது மட்டுமின்றி ரோகித் சர்மா ஏப்ரல் 30ல் தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரையில் 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6060 ரன்கள் எடுத்டுள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.