புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் 23ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக 2️ படங்களுடன் 12 தமிழக வீரர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது எல்லை கடந்து மீன் பிடித்ததாக தெரிவித்து இலங்கை கடற்படை அவர்களை படகுகளுடன் கைது செய்தது.
ஆகவே 12 மீனவர்களையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி இருக்கிறது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதோடு ஒரு மீனவர் 2வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு மட்டும் 14 மாதங்கள் யாழ்ப்பாணம் சிறையில் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவு பிறப்பித்ததோடு,மீனவர்கள் பயன்படுத்திய ஒரு படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.