பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் மார்ச் 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர், சம்பவத்திற்கு முன்னதாக, போலி ஆதார் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரு கூட்டாளியுடன் தங்கியது எம்ஐஏ விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் உள்ள CCTV காட்சிகளில் சந்தேக நபர் அணிந்திருந்த பேஸ்பால் தொப்பி சென்னையில் கடந்த ஜனவரி மாதம் […]

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசான மழை பெய்யும். மேலும், […]

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கடும் மழை மற்றும் புயல் தமிழகத்தை ஆட்டுவித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நகரமே மொத்தமாக முடங்கியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளில் கன மழை பெய்து வெள்ள […]

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்நிலையில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை தெரிவித்திருக்கிறார். தாம்பரம் உதவி காவல் ஆணையாளராக பணியாற்றிய காவல்துறை அதிகாரி சீனிவாசன் சைதாப்பேட்டை காவல்துறை உதவி ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரி அசோக் செல்வன் தாம்பரம் போக்குவரத்து […]

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளக்காதலன் கண்டித்ததால் அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கள்ளக்காதலி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மனைவி பிரியா(25) இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் தனியார் கொரியரில் வேலை பார்க்கும் கோபால கிருஷ்ணன் […]

கடலூர் அருகே ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கணவனை கைது செய்திருக்கின்றனர். கடலூர் மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் 42 வயதான இவர் குவைத்தில் வேலை செய்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பி இருக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் […]

மயிலாடுதுறை அருகே கணவரின் செல்போனில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்ததால் தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்விற்கு சென்று திரும்பி இருக்கின்றனர். அப்போது கணவனின் செல்போனை மனைவி எதிர்ச்சையாக பார்த்த […]

பட்டப் பகலில் பரபரப்பான வீதியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பீகாரின் நவதா மாவட்டத்தில் பரபரப்பான சாலையில் 20 வயது இளைஞர் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது முகத்தில் மிளகாய் […]

கேரளாவின் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு முன் அந்த இளைஞர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை பதிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அலுவா அழுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதினர் அட் ஜிமல் ஷெரிஃப். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆறு முப்பது மணிக்கு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு […]

பாஸ்போர்ட் சோதனைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரை சேர்ந்த பெண் அங்குள்ள கோட்வால் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரி […]