11th Result: 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…..! தமிழ் தேர்வில் 9 மாணவ மாணவிகளும் ஆங்கிலத் தேர்வில் 13 மாணவ மாணவிகளும் 100 மதிப்பெண் பெற்று சாதனை…..!

தமிழகத்தில் 10 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.


அதன்படி 11ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர், மாணவியர் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.

அதேபோல ஆங்கில பாடத்தில் 13 மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கின்றன. மேலும் கணித பாடத்தில் 17 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதன் பிறகு கணினி பயன்பாடுகள் பாடத்தில் 598 மாணவ மாணவிகளும், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வணிகவியல் பாடத்தில் 214 பேரும், 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதோடு, அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 995 பேர் 100 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்திருக்கின்றன.

Next Post

’என்னடா இப்படி இறங்கிட்டீங்க’..!! வீட்டில் ஹாயாக கேஸ் அடுப்பில் சாராயம் காய்ச்சிய பெண்..!! சிக்கியது எப்படி..?

Fri May 19 , 2023
விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் பகுதியிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. மீதம் உள்ள நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ளார். மேலும், பல கட்சிகளின் தலைவர்களும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியும், சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்தும் வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு […]
’என்னடா இப்படி இறங்கிட்டீங்க’..!! வீட்டில் ஹாயாக கேஸ் அடுப்பில் சாராயம் காய்ச்சிய பெண்..!! சிக்கியது எப்படி..?

You May Like