தமிழகத்தில் 10 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.
அதன்படி 11ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர், மாணவியர் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.
அதேபோல ஆங்கில பாடத்தில் 13 மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கின்றன. மேலும் கணித பாடத்தில் 17 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதன் பிறகு கணினி பயன்பாடுகள் பாடத்தில் 598 மாணவ மாணவிகளும், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வணிகவியல் பாடத்தில் 214 பேரும், 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதோடு, அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 995 பேர் 100 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்திருக்கின்றன.