12-வது முடித்திருந்தால் போதும் டாடா நிறுவனத்தில் வேலை !!

உலக புகழ்பெற்ற டாடா நிறுவனத்தின் பணிபுரிய பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12ம்  வகுப்பு படித்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஓசூர் டாடா நிறுவனம் இனைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.

அறிஞர் அண்ணா மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லத்துவாடி, நாமக்கல்.

பணியிடம்: இளநிலை தொழில் நிபுணர்கள்

டாடா தொழிச்சாலையின் இடம்: ஓசூர், அருகே தமிழ்நாடு

படிப்பு:  2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி

துவக்கநிலை சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்

உயரம் மற்றும் எடை: 145 செமி, 43 கிலோ (குறைந்தபட்சம்) முதல் 65 கிலோ வரை (அதிகபட்சம்)

வேலைவாய்ப்புக்கான அத்தியாவசியப் பயிற்சிதகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த அத்யாவசியப் பயிற்சித் தொகுப்பை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.

மேற்படிப்பிற்கான வாய்ப்புகள்: TEPL நிறுவனத்தில் ஒரு வருட அனுபவத்திற்குப் பிறகு இளநிலை பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு

பணியாளர்க்கான நலத்திட்டங்கள்: நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை, நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல், தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள். ஒழுங்குமுறைச்சட்டங்களுக்குட்பட்ட அனைத்து” நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Post

பெங்களூருவில் மீண்டும் அதே பிரச்சனை !! மழைக்கு தாக்குபிடிக்குமா??

Sat Oct 15 , 2022
பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. பெங்களூருவில் பிரதான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூரு- மைசூரு இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சல நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை அறிவித்துள்ளதால்மீண்டும் அதே பிரச்சனை தொடர்வது கவலைகொள்ளச்செய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. பகலில் வெள்ளம் வடியுமா என நினைத்தபோது மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. […]
Waterlogging areas in Bengaluru identified will be fixed soon Ktaka minister 1629215610406 1629215614922

You May Like