சிறுத்தைப்புலி தாக்கி 13 பேர் காயம் – வீடியோ வைரல்

அசாமில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி ஒன்று, காண்போரையெல்லாம் தாக்கியதில் 13 பேர் காயம் அடைந்தனர்.


அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியில் சிறுத்தை புலி ஒன்று சுற்றி திரிந்து வருவதாக மாவட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 பேர் மீது சிறுத்தைப்புலி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மேலும் ஒரு வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அவ்விடத்திற்கு சென்று நிலைமையை கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுத்தைப்புலியை மயக்கமடைய செய்து பிடிக்க முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை வன துறை பணியாளர்கள் உள்பட 13 பேர் சிறுத்தைப்புலி தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக ஓடி வரும் சிறுத்தைப்புலி காம்பவுண்டு வேலியை தாவி குதித்து, சாலை வழியாக தப்பி சென்றது. அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்களையும் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1newsnationuser3

Next Post

’இன்னைக்கு நைட் என் கூடவே தங்கிரு’..!! ’நோ’ சொன்ன காதலிக்கு ஓட்டலில் நேர்ந்த விபரீதம்..!! காதலன் வெறிச்செயல்..!!

Tue Dec 27 , 2022
தன்னுடன் ஹோட்டலில் தங்க மறுத்த காதலியை காதலன் கொடூர முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணும் கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அந்த வகையில், டிசம்பர் 25ஆம் தேதி இரவு இருவரும் சந்தித்துள்ளனர். அவர்கள் காசியாபாத்தில் உள்ள […]
crime scene murder 1

You May Like