10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் 13 % அதிகரிப்பு…! மத்திய அமைச்சகம் தகவல்…!

நாடு முழுவதும் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஈட்டியதைவிட அதிகரித்துள்ளது.


2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. இதே காலக் கட்டத்தில் முந்தைய ஆண்டு, 1159.08 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 7% சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. இதேபோல், முந்தைய ஆண்டு ரூ.1,17,212 கோடியாக இருந்த சரக்கு வருவாய், தற்போது ரூ.1,35,387 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 129.12 மில்லியன் டன்னாக இருந்த சரக்குப் போக்குவரத்து 2023 ஜனவரி மாதம் 134.07 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4% சதவீதம் அதிகமாகும். மேலும் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.13,172 கோடியாக இருந்த சரக்குப் போக்குவரத்து வருவாய், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.14,709 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 13% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உபி வாரியர்ஸ் பந்துகளை தெறிக்கவிட்ட கேப்டன்..!! அபார வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ்..!!

Wed Mar 8 , 2023
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், உபிவாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் உபி அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. டெல்லி அணியின் கேப்டன் மெக் லென்னிங் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில், 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 70 ரன்கள் குவித்து ராஜேஸ்வரி […]
உபி வாரியர்ஸ் பந்துகளை தெறிக்கவிட்ட கேப்டன்..!! அபார வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ்..!!

You May Like