14 மொபைல் மெசெஞ்சர் செயலிகள் முடக்கம்..!! மத்திய அரசு அதிரடி..!! என்ன காரணம் தெரியுமா..?

பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் 14 மொபைல் செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தகவல்களைச் சேகரித்துப் பரப்புவதற்குப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 14 மொபைல் செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷன்களை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தரைமட்ட பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலிகளில் Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema உள்ளிட்டவை அடங்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் பிற புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்றும் இந்திய சட்டங்களைப் பின்பற்றாத இதுபோன்ற பயன்பாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த பயன்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CHELLA

Next Post

வாட்சப் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அப்டேட் அறிவிப்பு…..! பயனர்கள் மகிழ்ச்சி….!

Mon May 1 , 2023
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அதன் காரணமாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் வசதிக்கு ஏற்றவாறு அந்த நிறுவனம் நாள்தோறும் புது, புது விதமான ஆப்பரேட்டுகளை வெளியிட்டு பயனர்களை மகிழ்வித்து வருகிறது. அதன்படி தற்சமயம் வாட்ஸப் செயலி சைட் பை சைட் என்ற புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த அம்சத்தின் மூலமாக ஏற்கனவே இருக்கின்ற சேட்டிலிருந்து வெளியேறாமல் […]
95bec839193959c567eae6035b8d1a1c396cb221446607aaeb92547667ed8c85

You May Like