DRDO-வில் 148 காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

job 1

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

விஞ்ஞானி – பி (Scientist ‘B’) – 127,

விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) – 9,

விஞ்ஞானி- பி (Scientist ‘B’) – 12

கல்வி தகுதி: இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல் & தொடர்பியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி அறிவியல் & பொறியியல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், இயற்பியல், வேதியியல், கெமிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு/ முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் அந்தந்த பாடப்பிரிவுகளுக்கான தாளில் GATE தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு 35 வயது, ஒபிசி பிரிவினருக்கு 38 வயது, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 வயது வரை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.56,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கொடுப்பனைகள், அகவிலைப்படி மற்றும் இதர சலுகைகளுடன் ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூ.1 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://rac.gov.in/ என்ற DRDO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2025

Read more: இந்தியாவின் முகவரி முறையை நவீனமயமாக்க 2 டிஜிட்டல் தளங்கள் அறிமுகம்..!! இதன் சிறப்பம்சங்கள் என்ன..?

Next Post

சட்டரீதியான நடைமுறை தெரியாத EPS ஒரு அரைவேக்காடு..!! - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Wed May 28 , 2025
ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது? அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே? என விமர்சித்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். […]
EPS Ragupathi 1

You May Like