தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியை சந்தித்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வர இயலாத மாணவர்களுக்காக துணை தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி +2 துணை தேர்வு எழுத விண்ணப்பம் செய்த தனி தேர்தலுக்கு வருகின்ற 14ஆம் தேதி பிற்பகலில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு செய்முறை தேர்வுக்கான தேதி விவரங்களை தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றும், துணை தேர்வுக்கான அட்டவணையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.