இந்தியாவில் 163 பேருக்கு புதிய XFG வகை கோவிட் பாதிப்பு உறுதி.. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா?

omicron virus 091704986 16x9 0 1

இந்தியாவில் 163 பேருக்கு XFG என்ற புதிய வகை கோவிட் பாதிப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா ?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 6500ஐ நெருங்கி உள்ளது. இதில் இந்தியாவில் XFG என்ற புதிய வகை கொரோனாவின் 163 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய SARS-CoV-2 மரபணுவியல் கூட்டமைப்பான INSACOG தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிய மாறுபாட்டின் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


மாநிலங்களில் XFG பாதிப்பு விவரம்

மகாராஷ்டிரா: 89

தமிழ்நாடு: 16

கேரளா: 15

குஜராத்: 11

ஆந்திரப் பிரதேசம்:6

மத்தியப் பிரதேசம்:6

மேற்கு வங்கம்:6

XFG மாறுபாடு என்றால் என்ன?

XFG மாறுபாடு கொரோனா வைரஸின் ஓமிக்ரான் துணை மாறுபாட்டின் வழித்தோன்றல் ஆகும். தி லான்செட் வெளியிட்ட ஆய்வின்படி, இந்த மாறுபாடு ஆரம்பத்தில் கனடாவில் கண்டறியப்பட்டது. இருப்பினும், “LF.7 மற்றும் LP.8.1.2 இலிருந்து தோன்றிய XFG மாறுபாடு, நான்கு முக்கிய ஸ்பைக் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது (His445Arg, Asn487Asp, Gln493Glu, மற்றும் Thr572Ile). மேலும் இந்த மாறுபாடு விரைவான உலகளாவிய பரவலை அடைந்துள்ளது.

XFG மாறுபாடு வலுவான நோயெதிர்ப்புத் தவிர்ப்பை காட்டுகிறது என்று தி லான்செட் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை தவிர்க்க உதவுவதுடன், வைரஸ் உயிர்வாழவும் பரவவும் அனுமதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

XFG மாறுபாடு ஒரு மறுசீரமைப்பு துணை வம்சாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது முன்னர் பரவியிருந்த இரண்டு ஓமிக்ரான் துணை-வகைகளுக்கு இடையிலான மரபணு மறுசீரமைப்பின் விளைவாக இது தோன்றியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

XFG இந்த முந்தைய வகைகளிலிருந்து மரபணுப் பொருட்களின் கலவையை கொண்டுள்ளது, ஆனால் மறுசீரமைப்புகள் இயல்பாகவே மிகவும் ஆபத்தானவை அல்ல என்று வைராலஜிஸ்டுகள் எச்சரிக்கின்றனர். அவற்றின் அச்சுறுத்தல் நிலை என்பது, அவை எவ்வளவு பரவக்கூடியவை அல்லது அவை ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடியுமா என்பதைப் பொறுத்தது.

இதுவரை, உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது இந்தியாவின் சுகாதார அமைச்சகத்தால் XFG ஒரு கவலைக்குரிய மாறுபாடு என வகைப்படுத்தப்படவில்லை. அதாவது, அதிகளவிலான தொற்று பரவல் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது தடுப்பூசி எதிர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கண்டறியப்படவில்லை.

XFG மிகவும் ஆபத்தானதா?

மற்ற ஓமிக்ரான் துணை வகைகளுடன் ஒப்பிடும்போது XFG மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது அல்லது அதிக இறப்புக்கு வழிவகுக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பெரும்பாலான ஓமிக்ரான் வகைகளை போலவே, தடுப்பூசி போடப்பட்ட அல்லது முன்னர் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்களில் இது லேசான மேல் சுவாசக்குழாய் அறிகுறிகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது..

இருப்பினும், வைரஸின் பரிணாமம் கணிக்க முடியாததாகவே உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.. நோயெதிர்ப்பு-தவிர்க்கும் பண்புகள் அல்லது மனித செல்களுடன் (ஸ்பைக் புரதம் வழியாக) பிணைப்பை மேம்படுத்தும் பிறழ்வுகள் கவனிக்கப்படாவிட்டால் புதிய அலைகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

XFG மாறுபாட்டின் சில பிறழ்வுகள் மனித செல்களுடன் பிணைக்கும் வைரஸின் திறனை பலவீனப்படுத்துகின்றன. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்க்க உதவுகின்றன, இதனால் அது உடலின் இயற்கையான பாதுகாப்பு அல்லது தடுப்பூசி பாதுகாப்பைக் கடந்து செல்ல அனுமதிக்கிறது.

XFG-க்கு எதிராக தடுப்பூசி பயனுள்ளதா?

இந்தியாவின் தற்போதைய கோவிட்-19 தடுப்பூசிகள் – கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் புதிய பூஸ்டர் டோஸ்கள் ஆகியவை XFG மாறுபாட்டிலிருந்து கடுமையான நோய் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 6500-ஐ நெருங்கும் கோவிட் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,491 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. கேரளவை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை கண்டறிந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் எந்த இறப்புகளும் பதிவாகவில்லை என்றாலும், ஜனவரி 1, 2025 முதல் ஜூன் 8-ம் தேதி வரை நாட்டில் மொத்தம் 65 இறப்புகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More : தும்மலை அடக்கினால் உயிருக்கே ஆபத்து..!! – மருத்துவர்கள் வார்னிங்

RUPA

Next Post

கள்ளச்சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்… கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பம் தெருவுல நிக்கணுமா..? - சீமான்

Tue Jun 10 , 2025
முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த […]
seeman34455 1559882512

You May Like