நாட்டு மருந்துகளை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்த 17 வயது மாணவி உயிரிழப்பு..!! திண்டுக்கல்லில் அதிர்ச்சி..

Rape 2025 6

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிறுமி கர்ப்பமாக இருந்த நிலையில் பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். 7 மாதம் ஆனபோதுதான் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் நாட்டு மருந்துகளை பயன்படுத்தி சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.


இதனால் அவருடைய உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது. பெற்றோர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதற்கிடையே மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காமல் சிறுமி இன்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார்? நாட்டு மருந்து வழங்கியவர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தகாத உறவால் கர்ப்பமடைந்த 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: கர்ப்பிணிகளே உஷார்..!! நீங்கள் செய்யும் இந்த தவறால் உங்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து..!! உடனே இதை தவிர்த்திடுங்க..!!

English Summary

17-year-old student dies after undergoing abortion using local medicines..!! Shock in Dindigul..

Next Post

2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள‌ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

Wed Oct 29 , 2025
2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, ஆன்லைன் மூலம் (online) விண்ணப்பிக்கலாம். இது குறித்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு தனது சுற்றறிக்கையில்; , 2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் […]
hajj

You May Like