உத்திர பிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு வழக்கில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது மனைவியை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. உத்திர பிரதேசம் மாநிலம் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜாவித் அகமத். இவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததோடு, திருமணம் செய்து […]

12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அனுமதி கேட்டு தொடரப்பட்டிருந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் அவரது சொந்த சகோதரனான மற்றொரு சிறுவனுக்கும் இடையே இருந்த தவறான உறவால் 12 வயது சிறுமி கற்பம் தரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரது […]

கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் படி குற்றமாகும். தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் சில்லறை மற்றும் மொத்த மருந்து […]

தர்மபுரி மாவட்டத்தில் வீட்டிலேயே கரு சோதனை மையம் நடத்தி பெண் சிசு கருக்கலைப்பு செய்து வந்த மருத்துவ கும்பலை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் சிசுவிலேயே கண்டறிந்து கொலை செய்யப்படுவது பரவலாக நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பவர்களையும் பெண் சிசுக்களை சட்டவிரோதமாக கொலை செய்பவர்களையும் கண்டறிந்து அவர்களின் […]

29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய 20 வயது பெண் ஒருவருக்கு பிறக்க வேண்டிய குழந்தையை தத்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 29 வார கருவை கலைக்க அனுமதி கோரி 20 வயதாகும் மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் உயிருக்கு ஆபத்து நேராமல் […]

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள , பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் 24 வயது இளம்பெண், சென்ற 16ம் தேதி தர்மபுரியை சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த போது அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்துள்ளார்.  இது பற்றி மருத்துவ துறையில் இருந்து அதிகாரிகள் விசாரித்ததில், அப்பெண்ணுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் , தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. […]

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்வதை மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் வசித்து வரும் 25 வயது பெண் ஒரு தனது கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார்.. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.. அதாவது, “இது […]

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர், கர்ப்பமாக இருந்தது விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கருவுற்ற சிறுமி தான் ஏழ்மையில் சுழல்பவள் என்றும், ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் அளவுக்கு பொருளாதார ரீதியாக வசதியாக இல்லை […]