தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்!… மணிப்பூரில் பதற்றம்!

Terrorist attack: மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் நள்ளிரவு 2.15 மணியளவில் தீவிரவாதிகள் – சிஆர்பிஎஃப் வீரர்களிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இதில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை 128 பட்டாலியனை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணமடைந்ததாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, பொதுத் தேர்தலின் முதல் கட்டத்தின் போது சத்தீஸ்கரில் ஒரு IED குண்டுவெடிப்பில் CRPF இன் உதவி கமாண்டன்ட் ஒருவர் காயமடைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

Readmore: சின்னம்மை எச்சரிக்கை!… தனிமைப்படுத்துங்கள்!… இதெல்லாம் கட்டாயம் தவிர்க்கவேண்டும்!

Kokila

Next Post

Breaking | 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Sat Apr 27 , 2024
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8ஆம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6, 7ஆம் வகுப்புகளுக்கு 3ஆம் பருவ தேர்வு மதிப்பெண், கிரேடுகளை […]

You May Like