ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள வெட்லபலேம் என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினருடன் உள்ளூர்வாசிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். பலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டாசு தயாரிக்கும் போது, பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடிப்பு தொழிற்சாலைக்கு அருகிலுள்ள கட்டிடங்களையும் அழித்தது. வெடிப்பில் உடல்கள் சிதறின. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெட்லபலேம் சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு அதிர்ச்சி தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அனிதாவை உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள நிலைமை குறித்து முதல்வர் அதிகாரிகளிடம் விசாரித்தார்.
Read More : IPL 2026 ஒத்திவைப்பு..? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் காரணமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!



