செங்கோட்டையன் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா…!

admk 2025

செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ஈடுபட்டார். பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ் பி வேலுமணி, காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் செங்கோட்டையன், அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த சுமார் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

Vignesh

Next Post

பாகிஸ்தானில் பயங்கரம்!. கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு!. ஒருவர் பலி!. பலர் காயம்!. அதிர்ச்சி வீடியோ!

Sun Sep 7 , 2025
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதைல் ஒருவர் பலியாகினார். பலர் காயமடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் ஊடக நிறுவனமான ‘டான்’ படி, கைபர் பக்துன்க்வா மாகாணம் பஜௌர் மாவட்டத்தின் கார் தெஹ்ஸில் அமைந்துள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியின்போது திடீரென குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்புக்குப் பிறகு, சுற்றிலும் புகை மூட்டமாக இருந்தது, கூட்ட […]
bomb blast pakistan

You May Like