2024 மக்களவைத் தேர்தல்..!! பிரதமரை தொடர்ந்து ராகுல் காந்தியும் தமிழகத்தில் போட்டி..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த ஆண்டு (2024) மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து அதில் வெற்றித் தோல்விகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர். மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதற்கான பட்டியலையும் தயாரித்து வருகின்றனர். கடந்த 2014 மற்றும் 2019இல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதனால், இந்த முறை பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் காங்கிரஸ் முனைப்புடன் உள்ளது. இந்த இலக்குடன் தீவிர தேர்தல் பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

2024 மக்களவை தேர்தல்..!! பிரதமரை தொடர்ந்து ராகுல் காந்தியும் தமிழகத்தில் போட்டி..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

அந்த வகையில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணயாத்திரை பல மாநிலங்களைக் கடந்து 108 நாட்களில் 49 மாவட்டங்கள் கடந்து 3122 கிலோமீட்டர் பயணித்து வந்தது தேசிய அளவில் மிகப்பெரும் கவனத்தை பெற்றது. மேலும், மக்களவை தேர்தல் குறித்து பயண யாத்திரை பொறுப்பாளர் மற்றும் தேர்தல் வியூக பொறுப்பாளர் சுனில் உட்பட பலருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த தேர்தலின் போது ராகுல் காந்தியை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நகர் முயற்சி செய்தனர். இதற்கிடையே, தற்போது ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக முன்பே ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

மக்கள் நீதி மய்யம் நடத்தவுள்ள ஜல்லிக்கட்டு.. கமல் வெளியிட்ட அறிவிப்பு.!

Fri Jan 6 , 2023
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்ட தனது கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை கமலஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடக்கின்றது. இதில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு தனது கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், “தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நம் கட்சியின் […]
kamal13 EPS0113chn 1

You May Like