கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சர் ஆக டி கே சிவக்குமாரும் மே மாதம் 20ஆம் தேதி பதவியேற்று கொண்டனர்.
அதோடு அமைச்சர்களாக ஜி பரமேஸ்வர், கே எச் முனியப்பா, கே ஜே ஜார்ஜ் எம்.பி.பாட்டீல்,சதீஷ் ஜார்கிஹோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமதுகான் உள்ளிட்ட 8 பேர் பதவி ஏற்று இருக்கிறார்கள். அதே போல சட்டப்பேரவையின் புதிய தலைவராக யூ டி காதர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து. மேலும் 24 இடங்கள் காலியாக இருந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் 24 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கிருஷ்ணபைரே கவுடா, தினேஷ் கொண்டுவராவ், ஈஸ்வர் கன்ட்ரே, ரஹீம்கான், சந்தோஷ் லட், கே. என். ராஜண்ணா, கே. வெங்கடேஷ், எச் சி மகாதேவப்பா, பைராலி சுரேஷ், என் எஸ் போஸ்ராஜ், சிவராஜ் சங்கடகி, ஆர் பி திம்மாபூர் பி நாகேந்திரா, மங்ஜாளு வைத்ய மது, பங்காரப்பா சிவானந்த பாட்டில், செல்வராய சாமி, சரணபசப்பா, தர்ஷனாபுரா, எஸ். எஸ், மல்லிகார்ஜுன், ருத்ரப்பா லமானி, எம் சி சுதாகர் எச் கே பாட்டில், லட்சுமி ஹெப்பாள்கர், சரண் பிரகாஷ் பாட்டில் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்